தமிழா ! தமிழா !
துண்டு பிரச்சாரம் வேண்டாம் இனி நமக்கிடையில்
தூண்டும் பிரச்சாரம் செய்திடுவோம் -தமிழனை தமிழ் படிக்க தூண்டும் பிரச்சாரம் செய்திடுவோம் !
வேற்றுமை வேண்டாம் நமக்கிடையில்- வெறருத்திடுவோம் வேற்றுமையை விதைப்பவர்களை நமக்கிடையில் !
மரபை மறந்திடவேண்டாம் -நம் மரபை
மார் தட்டிக்கொள்வோம் நாம் தமிழர் என்று !
வரும் தலைமை நமதென்றே போட்டியிடுவேம்
வந்த தலைமையும் நமதென்றே போற்றிடுவோம் !
இடம் பெயர்ந்து வந்தது நாம் மட்டும் அல்ல
நம்முடன் நம் தமிழும்தான் என்று ,
பறைசாட்டிக்கொள்வோம் உலக தமிழர்களுக்கெல்லாம் !
தமிழ் வளர்ப்போம் !
செந்தமிழ் வளர்ப்போம் !
செம்மொழி வளர்ப்போம்!

